அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Tuesday, September 13, 2011

ன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வலைப்பூ இடையில் சில காலங்கள் மேம்படுத்தப்பட முடியாமல் போனது. ஆனாலும் நம் நண்பர்கள் நேரிலும், தொலைபேசியிலும், ஈமெயில் மூலமும் இந்த வலைப்பூவை தொடரச் சொல்லி அன்புக்கட்டளை இட்டார்கள். மேலும் இந்த வலைப்பூ மேம்படுத்தப்படாமல் இருந்த போதிலும் தொடர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகைபுரிந்த அன்பர்களும் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இனிமேல் இன்ஷா அல்லாஹ் என்ன வேலையாக இருந்தாலும் சரி இனிமேல் இந்த வலைப்பூவை மேம்படுத்தி விடுகிறேன். இனி இந்த வலைப்பூ பல்சுவை இதழாக தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நண்பர்கள் இந்த வலைப்பூவிற்கு முன்னர் தந்த நல்ஆதரவை தொடர்ந்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நமது நண்பர்கள் தங்களது படைப்புகளையும் தொடர்ந்து அனுப்பி வையுங்கள். யாரையும் புண்படுத்தாமல் பொதுவான விஷயங்களாக இருக்கட்டும்.

வஸ்ஸலாம்.

என்றும் அன்புடன்,
ஜெஹபர்தீன்.