அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Saturday, April 4, 2009

நோக்கங்கள்

எங்களின் நோக்கங்கள்...

கூத்தாநல்லூர் வாசிகளின் நலனுக்காக, எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நல்ல காரியங்களை முன்வைத்துச் செல்ல, எங்களின் சிறிய கருத்துக்களை இங்கு முன் வைக்கிறோம். இதில் எந்தவித மாறுபட்ட கருத்துக்களுக்கும் இடமளிக்காமல் நம் ஊர் மக்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு ஒவ்வொருவரும் கடமையும், பொறுப்பும் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கூத்தாநல்லூர் நலத்திட்டங்களாக முன் வைப்பது...

1. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்தல்.
2. வசதியில்லாத ஏழைக் குடும்பத்தாருக்கு மருத்துவ செலவுகளுக்கு உதவுதல்.
3. வசதியில்லாத பெண்களின் திருமணங்களுக்கு உதவுதல்.

புரூனேயில் செயல் திட்டங்கள்...

1. வேலையில்லாமல் சிரமப்படுவோருக்கு உதவுதல்.
2. விபத்து, நோய்வாய்ப்படுதல், இறப்பு போன்ற பிரச்னைகளுக்கு உதவுதல்.
3. ஊர் செய்திகளை (மெளத்து, திருமணம் மற்றும் முக்கியமானவைகள்) ஒருவருக்கொருவர் உடனுக்குடன் அறிவித்தல்.
4. கூத்தாநல்லூர் வெப்சைட் ஆரம்பித்தல்.

தாங்கள் அனைவரும் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து எங்களின் திட்டங்களை நல்லமுறையில் நடைமுறைப்படுத்த உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் நம் காரியங்கள் அனைத்திற்கும் துணை நிற்பானாக! ஆமீன்.