அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நமதூர் நன்மைக்காக அல்அமான் இளைஞர் இயக்கம் மூலமாக செயல்பட்டு வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதை நாம் அனைவரும் அறிவோம். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், நமதூரின் கொடையாளர்கள் மூலமாகவும் தற்போது புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை அல்அமான் இளைஞர் இயக்கத்தார்கள் வாங்கி சிறிதுகாலம் தொய்வடைந்த இச்சேவையை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். நமதூருக்கு ஆம்புலன்ஸ் மிக முக்கியமான ஒரு தேவை என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இச்சேவை சிறப்புடன் செயல்பட நம்மாலான உதவியை அவர்களுக்கு வழங்க கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் முடிவு செய்து இருப்பதால், உங்களால் ஆன உதவியை சிறு அல்லது பெருந்தொகை மூலமாக கொடுத்துதவி இந்த தன்னலமற்ற சேவையில் நாமும் பங்கு பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.