அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Thursday, September 10, 2009

கூத்தாநல்லூர் ஆம்புலன்ஸ் விபத்து

09/09/2009 அன்று அதிகாலை கூத்தாநல்லூர் ஜமாத் ஆம்புலன்ஸ் (அல்-அமான் இளைஞர் இயக்க ஆம்புலன்ஸ்) சென்னை மருத்துவமனையில் நோயாளியை அட்மிட் செய்துவிட்டு திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிவிட்டது. இதில் ஓட்டுனருடன் ஒத்தாசையாக சென்ற ஜனாப். முஹம்மது ஜின்னா (வயது 27 ) மரணம் அடைந்துவிட்டார் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்). ஆம்புலன்ஸை ஓட்டிச்சென்ற இயக்க ஓட்டுனர் பலத்த காயமடைந்து சிகிச்சைபெற்று வருகிறார். இந்த விபத்து சிதம்பரம் கடலூர் இடையில் கொத்தடை கிராமத்தில் அதிகாலை 3.30 மணியளவில் நடந்தது. எதிரே வந்த லாரி மற்றும் கார் ஒன்று கட்டுப்பாடு இல்லாது தாறுமாறாக வந்ததால், மோதுவதை தவிர்க்க நமது ஓட்டுனர் முயன்றதில் சாலையோரம் இருக்கும் புளிய மரத்தில் மோதி ஆம்புலன்ஸும் பெரும் சேதம் அடைந்தது. இயக்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று ஏனைய ஏற்பாடுகளை உடனிருந்து செய்தார்கள். ஜனாப். முஹம்மது ஜின்னா அவர்களின் ஜனாஸா அன்று இரவு 7:30 மணிக்கு சின்னப்பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.